Thursday, February 5, 2015

வாட்டம் கொண்ட பூக்கள்

தான் கொண்ட வாசம் தான்,. 
அதிகமென்றெண்ணிய பூக்கள்... 
வாடிவிடுகின்றன,. 
அமர்ந்திருக்கும் அவள் கூந்தலின் வாசம் தான் 
அதிகமென்றுணர்ந்து..



தைத் திருநாள்

புத்தரிசி களைந்தெடுத்து..
புதுப்பானை பொங்கலிட்டு..
பொங்கி வரும் நுரைத்திரட்டு,
அதற்கிணையாய் குலவையிட்டு..
பொங்கலோ பொங்கலென பாடிவரும் அவளினிய குரல் கேட்டு..
வரிந்து கட்டிய வேட்டியோடு ஒடித்து கடிக்க கரும்புக்கட்டு..
தெய்வத்திற்கு படையலிட்டு,
எனக்குத் தனியாய் எடுத்துவந்து ஊட்டிவிட்டு,
எப்படி இருக்கிறது, நான் செய்தது என வினவும் அவளிடம்,


தித்திக்கிறது.. காரணம் - கற்கண்டு அல்ல.. உன் கைகண்டு..


என பதிலுரைத்த காலம் போய்..., 
வாட்சாப்பில் வாழ்த்துச் செய்தியோடும், ஃபேஸ்புக்கில் லைக்கோடும் முடிந்து போனது இப்பொங்கல்.,.
ஆனாலும் அனைவருக்கும் இனிய தைத்திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்...