Wednesday, June 19, 2013

அலையே..

கைகள் கோர்த்து கரையில் நிற்கும் பொழுதுகளில்...

தழுவ வரும் அலைகள்,

அவள் கால்களை தொட முயன்று தோற்கின்றன...

ஏ அலையே! எந்தன் கண் முன்னே நீ அவள் பாதம் தொட்டால்..

உன்னிடம் கூட கோபம் கொள்வேன் என்று தானே பின் வாங்குகிறாய் ?


Thursday, June 6, 2013

எனக்காய் ஓர் மழை

மழை வருமென குடையெடுத்து வரச்சொல்கிறாள்..
மறந்து செல்கிறேன் வேண்டுமென்றே..
அக்கறையாய் துவட்டி விடும் விரல்கள், 
மறதியை மன்னிக்காது திட்டும் உதடுகள்,
முழுதாய் நனைந்து வாசம் வீசும் கூந்தல்,
துப்பட்டாவில் குடை பிடிக்கும் கைகள்,
மேனி தொட்டு தெரிக்கும் மழைத்துளி
இவை வேண்டுமென்றே மறந்து செல்கிறேன் 
குடையை...