எனக்காய் ஓர் மழை
மழை வருமென குடையெடுத்து வரச்சொல்கிறாள்..மறந்து செல்கிறேன் வேண்டுமென்றே..அக்கறையாய் துவட்டி விடும் விரல்கள், மறதியை மன்னிக்காது திட்டும் உதடுகள்,முழுதாய் நனைந்து வாசம் வீசும் கூந்தல்,துப்பட்டாவில் குடை பிடிக்கும் கைகள்,மேனி தொட்டு தெரிக்கும் மழைத்துளிஇவை வேண்டுமென்றே மறந்து செல்கிறேன் குடையை...
No comments:
Post a Comment