Sunday, January 14, 2018

பொங்கல் வாழ்த்துக்கள்..



பூ விரல் வரைவில் புது வண்ணக் கோலமிட்டு..
மேனி தொடும் காலை கதிரவனைக் வாழ்த்தி விட்டு, உணவீந்த உழவனுக்கோர் நன்றி தந்து..
புத்தரிசி களைந்தெடுத்து..
புதுப்பானை பொங்கலிட்டு..
பொங்கி வரும் நுரைத்திரட்டு,
அதற்கிணையாய் குலவையிட்டு..
பொங்கலோ பொங்கலென பாடிவரும் அவளினிய குரல் கேட்டு..
வரிந்து கட்டிய வேட்டி பட்டு.. ஒடித்து கடிக்க கரும்புக்கட்டு, எனத் துள்ளிக் கொண்ட நானும்..
தெய்வத்திற்கு படையலிட்டு, யாருமறியாது கொஞ்சம் எடுத்துவிட்டு,
எனக்கு மட்டும் தனியாய்..
வாயில் ஊட்டிவிட்டு மெதுவாய்,
"எப்படி இருக்கிறது, நான் செய்தது" எனக் காதில் கேட்ட அவளிடம்,
தித்திக்கிறது.. காரணம் - கற்கண்டு அல்ல.. உன் கைகண்டு..
என பதிலுரைத்த காலம் போய்...,
வாட்சாப்பில் வாழ்த்துச் செய்தியோடும், ஃபேஸ்புக்கில் லைக்குகளோடும் கரைந்து போகிறது இப்பொங்கலும்..,.
தமிழ் மகளாம் தை மகள் கொணரட்டும் இன்பங்களை..
உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தைத்திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்... 

No comments:

Post a Comment